பேலியகொடை – பெதியாகொடை பகுதியில் நுகர்வுக்குப் பொருத்தமற்ற 4,250 தொன் சீனித் தொகையுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவலை, அங்கொடை, பிலியந்தலை மற்றும் அட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான 85,000 சீனி மூட்டைகளை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகிறது.









