குருநாகல் மாவட்டம், நாரம்மல – வாரியபொல வீதியில் சியம்பலாகஸ்கொட்டுவ, மதீனா தேசிய பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் இந்தத் துயரமான விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், பாடசாலைக்கு அருகில் வைத்து முச்சக்கர வண்டியுடன் பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 19 வயதுடைய இளைஞன், உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









