உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

மன்னார் நகர பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை மற்றும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனையில், உணவகத்தின் சுகாதாரமற்ற நிலைமை கண்டறியப்பட்டது.

குறிப்பாக சுகாதாரமற்ற ஈக்கள் மொய்க்கும் சூழலில் உணவு தயாரித்தல் மற்றும் மிகவும் அசுத்தமான சூழலில் உணவு சமைத்தல், கெட்டுப்போன காய்கறிகள் உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்துதல் மற்றும் கோழி கழிவுகளால் அசுத்தமடைந்த முட்டைகளை உணவில் சேர்ப்பது, சமைத்த மற்றும் சமைக்காத உணவுகள் பிரித்தறியாது அசுத்தமான குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) ஒன்றாக சேமித்து வைத்தல்.

சூடான உணவுகளை தயாரிப்பதற்கும் பரிமாறுவதற்கும் அபாயகரமான பிளாஸ்டிக் உபகரணங்களை பயன்படுத்துதல், உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உரிய மருத்துவ சான்றிதழ்கள் இன்றி உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளமை, குப்பைத் தொட்டிகளை மூடியின்றி அசுத்தமாக வைத்திருத்தல் போன்ற குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

உணவுப் பொருட்கள் அழிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கண்டவாறு சுகாதார விதிகளுக்கு முரணாக செயற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் உடனடி தடை விதித்தனர்.

அத்துடன், குறித்த உணவகத்துக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0