உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நியூசிலாந்தை சமன் செய்தது ஈரான்

25 பார்வைகள்

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் G குழுவிற்கு இடையிலான இன்றைய (16) போட்டியில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

தொடர் ஆரம்பமாகிய சில நிமிடங்களிலேயே நியூசிலாந்தின் கிறிஸ் வூட் கொடுத்த அருமையான பாஸை பயன்படுத்தி, எலிஜா ஜஸ்ட் பந்தை கோல் வலையினுள் செலுத்தி தனது அணிக்கு 1-0 என ஆரம்ப முன்னிலையைப் பெற்று கொடுத்தார்.

ஈரானின் தொடர் முயற்சிகளுக்குப் பலனாக 32ஆவது நிமிடத்தில் ரமின் ரெசேயன் ஒரு சிறப்பான கோல் அடித்து போட்டியை 1-1 என சமநிலைப்படுத்தினார்.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும், எலிஜா ஜஸ்ட், தனது இரண்டாவது கோலை பதிவு செய்து நியூசிலாந்தை 2-1 என முன்னிலைக்கு உயர்த்தினார்.

64ஆவது நிமிடத்தில் ரமின் ரெசேயன் வலது புறத்தில் இருந்து கொடுத்த துல்லியமான க்ரொஸை (Cross), ஈரானின் மொஹமட் மொஹேபி ஹெட்டர் மூலம் கோலாக மாற்றி மீண்டும் ஆட்டத்தை 2-2 என சமப்படுத்தினார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0