உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்

வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறான நடைபாதை வியாபாரிகளை அகற்றும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் குறித்த முன்னெடுப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடுகள் அளித்தமைக்காகவும், பிரதேச சபை நகரின் அழகினை மெருகூட்டுவதற்காகவும் விசாலமான வீதி ஊடாக பாதுகாப்பான போக்குவரத்து வசதியினை மேற்கொள்ளும் வகையிலும் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் பொலிஸார், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து இச்செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் சம்மாந்துறை நகரின் வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த நடைபாதை வியாபாரிகளை அகற்றப்பட்டதுடன் ஏனையோரை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையும் தொடராக செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இச்செயற்திட்டம் ஊடாக நகரின் நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை அவசியமான ஒன்றாக அமைந்துள்ளதாகவும் முறையான திட்டமிடல் மற்றும் கூட்டுப் பொறுப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயற்பாடு சம்மாந்துறை நகரை இன்னும் நேர்த்தியான ஒழுக்கமான மற்றும் பாதுகாப்பான ஒரு வணிக மையமாக மாற்ற வழிவகுக்கும் என பொதுமக்கள் உரிய அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு தான் நகரின் முன்னேற்றத்திற்கான அடிப்படையாகும். எனவே, அழகான சம்மாந்துறை நகரை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என உரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0