நெல்லினை உலரவிடும் தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!
இலங்கையில் பல்முக வறுமையை ஒழிப்பதற்காக மக்களின் வரி பணமாக ரூபாய் 25,000 மில்லியன் செலவில் கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இன்று (02) கிளிநொச்சி மாவட்டத்தில் கணேசபுரம் கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நெல்லினை உலரவிடும் தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் திட்ட உத்தியோத்தர், கிராம அலுவலர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


