உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சட்டச் சிக்கல்களை நீக்கி கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிக்க ஜனாதிபதி உத்தரவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதில் நடக்கும் சட்டச் சிக்கல்களை நீக்கும் நோக்கில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நியமிக்கப்பட்ட குழு சந்திப்பு நடைபெற்றது.

இதில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் விரைவாக அழிப்பதின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். இதற்காக நடவடிக்கைகளுக்கான முறையான செயன்முறையை உடனடியாகத் தயாரிக்குமாறு அவர் கூறினார்.
சட்டத் திருத்த வரைவு முன்பே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில், அழிப்பதற்கான காலத்தை குறைக்கும் வழிகளும், நீதிமன்றம், பொலிஸ் மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களும் பரிசீலிக்கப்பட்டது.

கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதை தடுக்கும், வழக்குத் தடயங்கள் மீண்டும்சமூகத்திற்குள் செல்வதைத் தடுக்குமாறு சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.இது தொடர்பில் பிரதிப் சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஜயவீர, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

நீதியும் தேசிய ஒருமைப்பாட்டும் அமைச்சின் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதிப் பொலிஸ் அதிகாரிகள், அரச பகுப்பாய்வுத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0