சட்டச் சிக்கல்களை நீக்கி கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிக்க ஜனாதிபதி உத்தரவு.!
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதில் நடக்கும் சட்டச் சிக்கல்களை நீக்கும் நோக்கில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நியமிக்கப்பட்ட குழு சந்திப்பு நடைபெற்றது.
இதில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் விரைவாக அழிப்பதின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். இதற்காக நடவடிக்கைகளுக்கான முறையான செயன்முறையை உடனடியாகத் தயாரிக்குமாறு அவர் கூறினார்.
சட்டத் திருத்த வரைவு முன்பே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில், அழிப்பதற்கான காலத்தை குறைக்கும் வழிகளும், நீதிமன்றம், பொலிஸ் மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களும் பரிசீலிக்கப்பட்டது.
கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதை தடுக்கும், வழக்குத் தடயங்கள் மீண்டும்சமூகத்திற்குள் செல்வதைத் தடுக்குமாறு சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.இது தொடர்பில் பிரதிப் சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஜயவீர, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
நீதியும் தேசிய ஒருமைப்பாட்டும் அமைச்சின் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதிப் பொலிஸ் அதிகாரிகள், அரச பகுப்பாய்வுத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.