உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வறட்சிக் காலங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
51 பார்வைகள்

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக மின்சாரத் தேவைகள் அதிகரித்து வருகின்றன என்று நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல். பிரதீப் பியதர்ஷன் பெரெரா தெரிவித்துள்ளார்.

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், நேற்றைய தினம் 3,089 மெகாவோட் மின்சாரம் தேவைப்பட்டு, நாட்டில் அதிகளவு மின்சாரம் பயன்படுத்திய தினமாக பதிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.


அன்று 60.56 ஜிகாவோட் மணி மின்சாரம் நுகரப்பட்டது; இன்றைய மின் நுகர்வு 58–59 ஜிகாவோட் மணித்தியால அளவில் நிலவும் நிலையில் உள்ளது. வறட்சி வானிலை மற்றும் எரிபொருள் சவால்கள் இருந்தபோதிலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை தொடர்ந்து வழங்கி வருகிறது.


இதனால் நாட்டில் மின் தடை ஏற்படுத்த தேவையில்லை மற்றும் பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரவிநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கலாநிதி பி.எல். பிரதீப் பியதர்ஷன் பெரெரா, பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார், ஏனெனில் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் பொதுவாக வறட்சியான காலப்பகுதியாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0