உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள் வழங்கும் திட்டம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இந்த ஆண்டு முதல், பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஒரு மாணவிக்கு தலா 1440 ரூபா பெறுமதியான நிதியுதவி வழங்கப்படும்.


ஒவ்வொரு மாணவிக்கும் தலா 720 ரூபா பெறுமதியான இரண்டு பெறுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. மாணவிகள் தமது விருப்பப்படி, 08 அணையாடைகள் கொண்ட 12 பக்கெட்டுகள் (தலா 120 ரூபா பெறுமதி) அல்லது 10 சுகாதாரத் துவாய்கள் கொண்ட 08 பக்கெட்டுகள் (தலா 180 ரூபா பெறுமதி) வாங்கிக் கொள்ளலாம்.


இந்த திட்டத்தின் மூலம் வருடம் முழுவதும் சுமார் 1.5 மில்லியன் மாணவிகள் பயனடைவார்கள். கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0