உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கைக்கு பாரிய நிதியுதவி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

ஆசிய அபிவிருத்தி வங்கி, இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு ஒதுக்கிய 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலர் வரை அதிகரிக்க ஒத்துழைப்பு தெரிவித்தது. இதிலிருந்து 200 மில்லியன் டொலர் உடனடியாக இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.


இலங்கையில் வந்த ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் மசாட்டோ கண்டா தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களுக்கு வங்கி எவ்வாறு உதவ முடியும் என்பதை விரிவாகக் கலந்துரையாடினர்.


‘டித்வா’ அனர்த்தத்துக்குப் பிறகுநாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலை திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவளிக்க தயாராக உள்ளது என வங்கி தலைவர் தெரிவித்தார். இவர், மத்திய மலைநாட்டின் நீர் கட்டமைப்புகளைப் பாதுகாத்து, மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாதிருக்கும் வகையில் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தயாராக இருப்பதும் கூறினார்.


ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய உதவிகளைப் பாராட்டி, இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையை பேணுவதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு என வலியுறுத்தினார்.


இச்சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் சோனா சிரேஸ்தா மற்றும் இலங்கை அரசாங்கத்தின் தொழில், பொருளாதார அபிவிருத்தி, நிதி அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0