பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!
எரிபொருள் விலை அதிகரிப்பினை கருத்திற்க் கொண்டு பேருந்து கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு காரணமாக பேருந்துக் கட்டணங்களை 12.19% அளவுக்கு உயர்த்த வேண்டி ஏற்பட்டது.