உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
22 பார்வைகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் நேற்று விசேட தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.


மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிராந்திய தாக்கங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


இந்த உரையாடல் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது சமூக வலைதளப் பதிவில், இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பயனுள்ள உரையாடல் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை மற்றும் அதன் விளைவுகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவர் விளக்கமளித்துள்ளார்.


அத்துடன், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் கொள்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும்வளர்ச்சியை உறுதிப்படுத்தும் செயற்திட்டங்கள் மீதான அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த இருதரப்பு உரையாடல் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0