மட்டக்களப்பில் வழமை போன்று இயங்கி வரும் தனியார் பேருந்து சேவைகள்.!
இலங்கையில் தனியார் பேருந்து சேவைகள் முடங்கியுள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமை போன்று இயங்கி வருகின்றது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று தொடக்கம் சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் நன்மை கருதி தொடர்ந்து சேவையினை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் முன்னெடுத்து வருகின்றது.
மட்டக்களப்பிலிருந்து தூர இடத்திற்கான சேவைகளும் குறுந்தூர சேவைகளும் நடைபெற்று வருவதை காணமுடிகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தனியார் பேருந்துகளுக்கும் உள்ள போதிலும் மக்களின் நன்மை கருதி சேவைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் தமது நிலைமையினை கருத்தில்கொண்டு தமக்கான எரிபொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
