உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மகளிர் அணியின் பங்கு அவசியம் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

சவால்கள் மிகுந்த காலங்களிலும் சளைக்காமல் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்த பெருமைக்குரியவர்கள் எமது மகளிர் அணியினரே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மக்களின் நலனை மையமாகக் கொண்ட சிந்தனைகளுடன், அந்த அர்ப்பணிப்பு உணர்வு தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளிர் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்று இன்று (21) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.இதில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:


மக்களுக்கான அரசியல்அமைப்பில் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்பது தமது உறுதியான நிலைப்பாடு எனக் குறிப்பிட்டார். அதன் அடிப்படையிலேயே ஆயுதப் போராட்ட காலத்திலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தது 50 சதவீதம் இருக்க வேண்டும் என்பதே தமது கொள்கை என்றும், அதற்கமைய அக்காலத்தில் வெளிநாடுகளில் ஆயுதப் பயிற்சி பெற அனுப்பப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் பெண்களும் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறினார்.


இன்றும் அதே கொள்கை கட்சிச் செயற்பாடுகளில் பின்பற்றப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், பெண்களின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0