பெருநாள் தினத்தில் கடற்கரை பகுதியை அழகுபடுத்திய கல்முனை கடற்படை.!
அம்பாறை மாவட்டம் கடற்கரைகளில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக், கண்ணாடி, டின் போன்ற கழிவுகள் பரவலாக காணப்பட்ட நிலையில், சமூக ஊடகங்களில் இதுகுறித்த தகவல்கள் அண்மையில் வெளியானன.இதையடுத்து பல்வேறு தரப்பினரும் “சிரமதானம்” என்ற பெயரில் தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
கல்முனை பகுதியில் அமைந்துள்ள கடற்படை ஸ்ரீலங்கா நௌ தீகாயு முகாம் படையினரால் இன்று பெருநாள் தினம் மற்றும் கிழமைகளில் கடற்கரைப்பகுதிகளில் தேங்கி காணப்படும் பிளாஸ்டிக், கண்ணாடி, டின் போன்ற கழிவுகள் உரப்பையில் சேகரிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதிகள் முறையாக துப்புரவு செய்யப்பட்டுள்ளது.
கடற்கரையில் கழிவுகள் அதிகமாக காணப்படுவதற்கு, அடைமழை காரணமாக உருவான வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக கடந்த காலங்களில் வெட்டப்பட்ட தற்காலிக கால்வாய்கள் காரணமாக, கடற்கரைப்பகுதிகளில் கழிவுகள் கரை ஒதுங்கி நின்றுபரவியுள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவுகள் பரவலாக இருந்தது.இவை மீன்பிடி தொழிலில் மீனவர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியதோடு, வலைகளிலும் சிக்கி பல சிரமங்களை உண்டாக்கியிருந்தது.
இந்த நிலையில் அனைத்து பிரதேசங்களிலும் கடற்படை படையினரால் கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டு, கடற்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் சுத்தமாக செய்யப்பட்டுள்ளன.
தற்போது, கிழமைகளில் படிப்படியாக கனரக வாகன உதவியுடன் இந்த நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன.மேலும், மாலை வேளையில் இக்கடற்கரையை நோக்கி சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் தமது ஓய்வு நேரங்களை கழிக்க வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.
