உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தனங்கிளப்பு காட்டு பகுதியில் காணாமல் போன விரிவுரையாளர் சடலமாக மீட்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவப் பீடத்தைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் ஒருவர், அவரது மகளின் கணவரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

முறைப்பாட்டில், தனது தாயாரும் தங்கையும் தங்கையின் கணவரால் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொலிஸார் சம்பவ இடமான பாண்டியன்தாழ்வு பகுதியில் உள்ள வீட்டைச் சென்றடைந்து விசாரணை மேற்கொண்டபோது, வீட்டின் கூரை ஓடு அகற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான சான்றுகள் மற்றும் அறுக்கப்பட்ட தலைமுடி போன்ற ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரம்மூலம் பணம் பெற்றதையும், திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பியதையும் பொலிஸார் கண்டறிந்தனர்.

அந்த நிலையத்தின் கண்காணிப்பு காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் மூலம், 21 வயதுடைய கணவரும் 19 வயதுடைய மனைவியும் திருகோணமலை பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விரிவுரையாளர் தாக்குதலின் போது உயிரிழந்ததாகவும், பின்னர் அவரது உடலை யாழ்ப்பாணம் பகுதியில் ஒரு இடத்தில் கொண்டு சென்று வீசியதாகவும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனங்கிளப்பு பகுதியில் இருந்து விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0