வடமராட்சி பாடசாலையில் அதிபர் பற்றாக்குறை: பெற்றோர் கையொப்ப போராட்டம்.!
யாழ்ப்பாணம், வடமராட்சி, கரணவாய் வேதாரணியேஸ்வர வித்தியாலயத்தில் நீண்டகாலமாக அதிபர் நியமனம் செய்யப்படாததையடுத்து, மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
சுமார் 150 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி மாற்றலாகிச் சென்றதையடுத்து, இதுவரை புதிய அதிபர் நியமிக்கப்படவில்லை. தற்போது சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர் பதில் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.
இந்த நிலைமையை முன்னிட்டு, உடனடியாக புதிய அதிபரை நியமிக்குமாறு வலியுறுத்தி பெற்றோர் நேற்று கையொப்பச் சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.மேலும், வடக்கு மாகாண ஆளுநருக்கு மனுவொன்றை அனுப்பி தீர்வு கோருவதற்கான நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.