உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மத்திய கிழக்கு யுத்தம் முடிந்து சமாதானம் நிலவட்டும் – ரவூப் ஹக்கீம் பெருநாள் வாழ்த்து.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் யுத்தம் விரைவில் முடிவுக்கு வந்து நிரந்தர சமாதானம் நிலவ வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ரமழான் மாதம் ஆன்மீகப் புத்தெழுச்சியும் தியாக மனப்பான்மையும் வளர்க்கும் புனித காலமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.


உலகின் பல பகுதிகளில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக முஸ்லிம் மக்கள் துயரத்துடன் இந்தப் பெருநாளை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், காசா மற்றும் பலஸ்தீனம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்ட அவர், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அமைதி கிடைக்க வேண்டும்எனப் பிரார்த்தனை செய்தார்.


யுத்தம் விரைவில் முடிவுக்கு வந்து நீதி மற்றும் நிரந்தர சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், இந்தப் பெருநாள் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் தருணமாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களையும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0