அனைவரினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்ட சுபீட்சமான தேசத்தை உருவாக்க ஒன்றிணைவோம் – நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அழைப்பு.!
அனைவரினதும் உரிமைகளும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்ட, அமைதி மற்றும் சுபீட்சம் நிறைந்த தேசமொன்றை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு அவர் வெளியிட்ட ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில், ரமழான் நோன்பின் மூலம் ஒழுக்கம், எளிமை, சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த பண்புகள் வலுப்பெறுகின்றன எனக் குறிப்பிட்டார்.
மேலும், உலகம் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் இந்த காலத்தில், அனைவரின் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படும் சூழல் உருவாக வேண்டும் என அவர் பிரார்த்தனை செய்தார்.
நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னேற்ற அரசாங்கம் உறுதியுடன்செயற்பட்டு வருவதாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காக பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் செயல்படுமாறு அனைவரையும் அழைத்தார்.
முஸ்லிம் சமூகத்தினருக்கு அமைதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த இனிய ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.