உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எரிபொருள் நெருக்கடி: அரசின் திட்டமின்மையே காரணம் – ரவிகரன் குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு, அரசாங்கம் கேள்வி அதிகரிப்பைக் கட்டுப்படுத்த தவறியதாலும் அதனால் ஏற்பட்ட எரிபொருள் பதுக்கல்களுமே காரணம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் புதன்கிழமை அரச விடுமுறை அறிவிக்கப்பட்டமை குறித்தும் விமர்சித்தார்.

உலகளாவிய நெருக்கடி நிலைமைகளுக்கு அரசாங்கம் திடமான கொள்கை முடிவுகளை எடுக்காமல், நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளை மட்டுமே மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.மேலும், நீண்டகாலத் திட்டமிடல் இல்லாத காரணத்தால், அரசாங்கம் தற்காலிக நடவடிக்கைகளிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் வரிசைகள்மற்றும் பதுக்கல்கள் கடந்த மாத இறுதியிலேயே தொடங்கியதாகவும், அதற்குப் பின்னரே QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தபடி, ஒன்றரை மாதத்திற்கு போதுமான எரிபொருள் வெறும் 10 நாட்களிலேயே முடிந்துவிட்டதாக கூறிய அவர், இந்நிலைக்கு அரசாங்கத்தின் செயலிழப்பு முக்கிய காரணம் எனவும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0