நோன்புப் பெருநாள் வாழ்த்து: ஒற்றுமையுடன் வாழ வேண்டும் – உதுமாங்கண்டு நாபீர்.!
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான உதுமாங்கண்டு நாபீர், முஸ்லிம் சமூகத்தினருக்கு தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு, இந்நாள் சுபிட்சம் மிக்க நாளாக மலர வேண்டுமென வாழ்த்தினார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க ஒரு மாத கால நோன்பை நிறைவு செய்த முஸ்லிம்கள் உலகம் முழுவதும் ஈதுல் பித்ர் திருநாளை கொண்டாடும் இவ்வேளையில், சமுதாய ஒற்றுமை மிகவும் அவசியமானதாக இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம் சமூகத்தினருக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் சதித் திட்டங்கள் உலகளவில் இடம்பெற்று வரும் சூழலில், ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் செயல்பட வேண்டியது முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், மதச் சுதந்திரத்துடன் வாழ்வதற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்நாளில் இறைவனிடம் பிரார்த்திப்பதாக தெரிவித்த அவர், கோபம், பொறாமை போன்ற தீய எண்ணங்களை விலக்கிமனிதநேயத்துடன் சமூகத்தில் நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இலங்கை முஸ்லிம்கள் புதிய நம்பிக்கையுடன் ரமழான் திருநாளைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழ இறைவனை நாடுவோம் என்றும் தெரிவித்தார்.