உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அரச வைத்தியர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து அவதானம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

அரச வைத்தியர்கள் இடமாற்றம் பெறும் போது அவர்களது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதில் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய மற்றும் மருத்துவ விசேட நிபுணர்கள் சங்க பிரதிநிதிகள் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.


இந்தச் சந்திப்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்துகொண்ட நிலையில், வைத்தியர்களின் இடமாற்றங்களின் போது அவர்களது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாத வகையில் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


வைத்தியர் இடமாற்ற நடைமுறைகளின் கீழ், பிள்ளைகளை புதிய பாடசாலைகளில் சேர்ப்பதில் உள்ள தடைகள் குறித்து விசேட நிபுணர்கள் பிரதமருக்கு விளக்கமளித்தனர். இதனையடுத்து, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும், தற்போதைய அனுமதி நடைமுறைகளை மீளாய்வு செய்து, இரு அமைச்சுகளும் இணைந்து நடைமுறைசார்ந்த மற்றும் திறமையான புதிய அமைப்பை உருவாக்கவும் இணக்கம் காணப்பட்டது.


அரச வைத்தியர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை அனுமதி சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் சுகாதார அமைச்சு ஏற்கனவே விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும், இடமாற்றங்கள் காரணமாக ஏற்படும் காலதாமதங்கள் மற்றும் தடைகளை குறைப்பதே அதன் பிரதான நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0