ராகம துப்பாக்கிச் சூடு: கொ*லை முயற்சி வழக்கில் சந்தேக நபர் கைது.!
ராகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, பேலியகொட பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாதம்பை – இஸ்சம்மடில்ல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் பாரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரின் வாக்குமூலத்திற்கு அமைய, அவரது வீட்டின் முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த 12 போர்ட் ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 14 தோட்டாக்கள் பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டன.கைப்பற்றப்பட்ட ஆயுதம் முன்பு ஏதேனும் பாரிய குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தடயவியல் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்தத் தாக்குதலின் பின்னணியில் தனிப்பட்ட விரோதமா அல்லது பாதாள உலகக் குழுக்களின் தொடர்பா என்பது குறித்தும் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.