உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தடையற்ற மின்சாரம் வழங்குவதே அரசின் பிரதான இலக்கு – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாகும் என்றும், அதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


இன்று (20) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், உலகச் சந்தையில் நிலக்கரி உள்ளிட்ட பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

சாதாரண காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது கொள்வனவுகளுக்கான விலைகள் அதிகரித்துள்ளதால், எதிர்கால தீர்மானங்கள் அனைத்தும் உலகச் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், மின்சார நுகர்வு மாதந்தோறும் மாறுபடுவதால் சில காலங்களில் அதிகப்படியான தேவை உருவாகின்றது என்றும், நிலக்கரியின் தரம் தொடர்பான அறிக்கைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் தொடர்பான தீர்மானங்கள் உலகச் சந்தை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0