ஆன்மிக ஒளியால் நிறைந்த சிறப்பு இப்தார் நிகழ்வு கல்முனை பள்ளிவாசலில் நடைபெற்றது.!
சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (19) ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் ஆன்மிக ஒளியால் நிறைந்த சிறப்பு இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வு சமூக உறவு, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் மற்றும் ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
பள்ளிவாசல் தலைவர் முன்னால் அதிபர் இஸ்மாயில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயலாளர் சமால்தீன், நிர்வாகத்தினர், உலமாக்கள், ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டு புனித ரமழானின் மகத்துவத்தையும் சமூக ஒற்றுமையின் அழகையும் மேலும் உயர்த்தினர்.
இவ் இப்தார் நிகழ்வு பகிர்வு, அன்பு, அக்கறை மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த வெளிப்பாடாக அமைந்து, கல்முனைசமூகத்தில் ஆன்மிக ஒளியையும் மகிழ்ச்சியையும் பரப்பியது.
