சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு; இருவர் கைது.!
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோராவத்த பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் நேற்று புதன்கிழமை (18) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 52 மற்றும் 59 வயதுடைய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பொகவந்தலாவை மற்றும் பலங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.