இந்திய அரசின் உதவியில் புத்தளத்தில் கட்டப்பட்ட பாலம் திறப்பு.!
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிலாபம்–தொடுவா தற்காலிக இரும்பு பாலம் இன்று (18) பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. அண்மைய டிட்வா புயலின் போது கடுமையாக சேதமடைந்த இந்த பாலம், எதிர்கால அவசர நிலைமைகளை சமாளிக்க இந்தியா வழங்கிய உதவி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
240 மீட்டர் நீளமுடைய பாலம் நிர்மாணத்திற்கு 70 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு, இந்தியா வழங்கிய உதிரிப்பாகங்களும் பயன்படுத்தப்பட்டன. குறுகிய காலத்தில் இந்திய இராணுவ பொறியியலர் குழுவினரால் பணிகள் முடிக்கப்பட்டது.
பாலத்தை திறந்துவைக்க இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் மற்றும் பல அதிகாரிகளும் நிகழ்வில் இருந்தனர்.இந்த பாலம் மீண்டும் போக்குவரத்து வசதியை உறுதிப்படுத்துவதோடு, மக்கள் தினசரி பயணம், மீன்பிடி தொழில், சிறு வணிக நடவடிக்கைகள் மற்றும் அவசர சேவைகளுக்கு முக்கிய உதவியாக இருக்கும். திட்டம் இரு நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.