உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தென் கடலில் கைதான 10 சந்தேகநபர்களும் தடுத்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் பலநாள் மீன்பிடி படகு ஒன்றில் 654 கிலோகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்களில் ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கைதான 10 பேரும் இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, ஐவரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டதுடன், ஏனைய ஐவரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இலங்கை கடற்படையினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 654 கிலோ கிராம் போதைப்பொருளுடன் 10 சந்தேக நபர்கள் ஆழ் கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த போதைப்பொருள் தொகையுடன் கூடிய மீன்பிடி படகு கடந்த 12 ஆம் திகதி திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.அங்கு முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, படகிலிருந்து போதைப்பொருள் அடங்கிய 48 பொதிகள் கண்டெடுக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பொதிகளில்; 478 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும், 176 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த போதைப்பொருள் தொகையின் பெறுமதி 10 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

65 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

67 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

58 0 0