உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் பிரச்சனைகள்: பாராளுமன்ற உறுப்பினருடன் முக்கிய கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, மாவட்டம் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோருக்கு இடையில் 16.03.2026 அன்று முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.


கலந்துரையாடலில், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சிக்கல்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. ஒன்றிய பிரதிநிதிகள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை எனக் குறை கூறி, மாவட்டத்தில் நிரந்தர அலுவலகம் அமைப்பது, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது நிகழ்வுகளில் உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல், ஆட்சேர்ப்பு நிபந்தனைகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாகஉயர்த்துதல் போன்ற விடயங்களை வலியுறுத்தினர்.


மட்டக்களப்பில் இதுவரை அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு நடக்காத நிலையில், பாராளுமன்ற உறுப்பினரின் வினைத்திறனான செயற்பாடுகளைப் பாராட்டி இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது என ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


வைத்தியர் இ.சிறிநாத் எதிர்காலங்களில் பிரதேச செயலக மட்டங்களில் கூட்டங்களை நடத்தியே தீர்வுகளை பெற்றுத் தருவதாகவும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பாராளுமன்ற அமர்வுகளில் தேவையான அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும் உறுதி செய்தார்.இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் மற்றும் பல மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

58 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

56 0 0