உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள்; நால்வர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகியங்கனை – தெஹியத்தக்கண்டிய வீதியின் சந்துன்புர பகுதியில் பாரவூர்தி மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 58 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு – குருநாகல் வீதியின் கொஹொலான பகுதியில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஒன்று சுவரில் மோதி, எதிரே வந்த உந்துருளியை மோதியுள்ளது.

இந்த விபத்தில் அலவ்வ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய உந்துருளி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, கேகாலை – ஹெட்டிமுல்ல வீதியின் ஹேனக்கந்த பகுதியில் அதிவேகமாகச் சென்ற உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

இதில் பின்னால் அமர்ந்து பயணித்த பொஸ்ஸெல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குளியாப்பிட்டிய – நாரம்மல வீதியின் பரிகொட பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற 73 வயதுடைய முதியவர் ஒருவர் பாரவூர்தியுடன் மோதி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வீதி விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

56 0 0