விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தாமதம்.!
இயக்குநர் வினோத் இயக்கத்தில், பிரபல நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள விஜய்யின் இறுதித் திரைப்படம் இது எனக் கூறப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இந்நிலையில், திரைப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களால் வெளியீடு தாமதமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த மறுதணிக்கை நடவடிக்கை, அதிகாரி ஒருவரின் உடல்நலக் குறைபாடு காரணமாக எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த பின்னரே இந்த திரைப்படம் வெளியாகக்கூடும் என்ற தகவலும் திரை வட்டாரங்களில் பரவி வருகின்றது.இதற்கிடையில் நீண்டகால தாமதம் காரணமாக, சுமார் 120 கோடி ரூபாவிற்கு இந்த திரைப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமையை பெற்றிருந்த நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை தற்போது ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் பின்னணியைக் கொண்டதாகக் கூறப்படும் இந்த திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக நிலவும் இழுபறி திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.