சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படப் படப்பிடிப்பு சென்னையில்.!
நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை நகரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, சந்தானம் நாயகனாக நடிக்கும் இந்த புதிய திரைப்படம் அவரது நடிப்பில் உருவாகும் 20-ஆவது படமாகும். இந்த திரைப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் மற்றும் கே7 ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த காலப் பயணக் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஒரு குற்றத்தை விசாரிக்கத் தொடங்கும் துப்பறியும் நிபுணரை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அந்த விசாரணை அவரை எதிர்பாராத சாகசங்களும் பரபரப்பான நிகழ்வுகளும் நிறைந்த பயணத்துக்கு இட்டுச் செல்கிறது.
இத்திரைப்படத்தில் கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியன், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலரும் சந்தானத்துடன் இணைந்து நடித்துவருகின்றனர்.
இதற்கான ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம். நாதன் மேற்கொண்டு வருவதுடன், இசையமைப்பை நிவாஸ் கே. பிரசன்னா வழங்குகிறார். கலை இயக்குநராக ஜாக்கி பணியாற்றி வருகிறார்