சூர்யாவின் ‘கருப்பு’ படம் ஏப்ரலில் வெளியாகும்: இசையமைப்பாளர் தகவல்.!
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது:
“ஏப்ரல் மாதத்தில் ‘கருப்பு’ வெளியாகும். தற்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தில் கருப்பசாமி உள்ளிட்ட சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். தமிழ் கலாச்சாரத்தை உயர்த்தும் விதத்தில் என் பின்னணி இசை இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இந்தப் படத்தில் த்ரிஷா, ஆர்.ஜே. பாலாஜி, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே. விஷ்ணு பணியாற்றுகிறார்.