யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு.!
நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டாக்ஸிக் : பெரியவர்களுக்கான ஒரு பரிகதை’ திரைப்படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்த கேவிஎன் புரொடக் ஷன்ஸ் நிறுவனம், யாஷின் மாஸ்டர்மைண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. முதலில் இந்தப் படம் மார்ச் 19ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விளம்பர நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக, படத்தின் வெளியீட்டு திகதி ஜூன் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், இந்தத் திரைப்படம் இந்தியாவிலும் உலகளாவிய பார்வையாளர்களுடனும் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகள் இந்தப் படத்தின் முக்கிய சந்தையாக இருப்பதால் அங்கு நிலவும் சூழ்நிலைகளை தயாரிப்பாளர்கள் கவனமாக கண்காணித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, விரிவான ஆலோசனைக்குப் பிறகு வெளியீட்டு திகதி மாற்றப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.