‘தாய் கிழவி’ 3 நாளில் ரூ.22 கோடி வசூல் – படக்குழு உற்சாகம்.!
தாய் கிழவி திரைப்படம் உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தயாரிப்புக் குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படம் திரையுலகினர், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, யாரும் எதிர்பாராத அளவில் வசூல் உயர்ந்துள்ளது.
வெளியான முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.22 கோடி மொத்த வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த வரவேற்பு தொடர்ந்தால், படம் மேலும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் மட்டும் திரையரங்க ஓட்டம் நிறைவடையும் போது, சுமார் ரூ.15 கோடி வரை பங்குத் தொகை கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.
மேலும், படம் வெளியாகும் முன்பே ஓடிடி, தொலைக்காட்சி மற்றும் இசை உரிமைகள் விற்பனையாகியுள்ளதால், தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே கணிசமான லாபம் கிடைத்துள்ளது. எனவே, திரையரங்க வசூல் கூடுதல் லாபமாகவே பார்க்கப்படுகிறது.