உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

‘தாய் கிழவி’ 3 நாளில் ரூ.22 கோடி வசூல் – படக்குழு உற்சாகம்.!

சினிமா 6 மாதங்கள் முன்
23 பார்வைகள்

தாய் கிழவி திரைப்படம் உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தயாரிப்புக் குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படம் திரையுலகினர், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, யாரும் எதிர்பாராத அளவில் வசூல் உயர்ந்துள்ளது.


வெளியான முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.22 கோடி மொத்த வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த வரவேற்பு தொடர்ந்தால், படம் மேலும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் மட்டும் திரையரங்க ஓட்டம் நிறைவடையும் போது, சுமார் ரூ.15 கோடி வரை பங்குத் தொகை கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.

மேலும், படம் வெளியாகும் முன்பே ஓடிடி, தொலைக்காட்சி மற்றும் இசை உரிமைகள் விற்பனையாகியுள்ளதால், தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே கணிசமான லாபம் கிடைத்துள்ளது. எனவே, திரையரங்க வசூல் கூடுதல் லாபமாகவே பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0