அஜித் ஒரு சிறந்த மனிதர் – ஜி.வி.பிரகாஷ் புகழாரம்.!
நடிகர் அஜித் குமார் ஒரு சிறந்த மனிதர் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இயக்குநர் விஜய் இயக்கத்தில் அஜித்தின் கார் பந்தயம் தொடர்பான படம் தயாராகி வருகிறது. இது முதலில் ஆவணப்படமாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இது முழுமையான திரைப்படம் என்றும், சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் வகையில் உருவாகி வருவதாகவும் இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், அஜித் குறித்து பேசுகையில், “அஜித் ஒரு சிறந்த மனிதர். ‘வெயில்’ படத்திற்குப் பிறகு ‘கிரீடம்’ என்ற பெரிய பட வாய்ப்பை அவர் வழங்கினார். பின்னர் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் இணைந்து பணியாற்றினோம். தற்போது அவரது கார் பந்தயப் படத்துக்கு இசையமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று கூறினார்