உண்மைக் காதலை கற்றுத் தந்தவர்” – கணவர் குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி!
திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் இன்று ராஜஸ்தான் மாநிலம் உதயபூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர்கள், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
திருமணத்துக்குப் பின்னர் ராஷ்மிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து உணர்ச்சிபூர்வமான பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தமக்கு உண்மையான அன்பின் அர்த்தத்தை உணர்த்தியவர் விஜய் தேவரகொண்டா எனவும், தமது வாழ்க்கையின் எல்லா சாதனைகளும் அவரின் ஆதரவால் அர்த்தமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது துணைவியாக இருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.விஜய் தேவரகொண்டாவும் தனது திருமண செய்தியை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இருவரும் இணைந்து வாழ்வது குறித்து திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் இணைந்து நடித்த திரைப்படங்களின்போது காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.