உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

உண்மைக் காதலை கற்றுத் தந்தவர்” – கணவர் குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி!

சினிமா 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் இன்று ராஜஸ்தான் மாநிலம் உதயபூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர்கள், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.


திருமணத்துக்குப் பின்னர் ராஷ்மிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து உணர்ச்சிபூர்வமான பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தமக்கு உண்மையான அன்பின் அர்த்தத்தை உணர்த்தியவர் விஜய் தேவரகொண்டா எனவும், தமது வாழ்க்கையின் எல்லா சாதனைகளும் அவரின் ஆதரவால் அர்த்தமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரது துணைவியாக இருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.விஜய் தேவரகொண்டாவும் தனது திருமண செய்தியை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இருவரும் இணைந்து வாழ்வது குறித்து திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் இணைந்து நடித்த திரைப்படங்களின்போது காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0