‘அரசன்’ திரைப்படத்திற்கு பெரும் உழைப்பு தேவை – சமுத்திரக்கனி.!
சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை முடித்த பின் கோவில்பட்டியில் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
‘வடசென்னை’ படத்தின் காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு இடத்தில் நடக்கும் கதை இது என வெற்றிமாறன் ஏற்கனவே கூறியிருந்தார். அந்தத் தகவலை சமுத்திரக்கனியும் உறுதிப்படுத்தியுள்ளார்.இது குறித்து பேசிய சமுத்திரக்கனி, ‘அரசன்’ படத்தில் தாமும் நடிக்கவுள்ளதாகவும், கதையின் விவரங்களை தற்போது வெளிப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் வெற்றிமாறன் கதையைச் சொல்லும் போது அது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும், ‘அரசன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய உழைப்பு அவசியம் என்றும், அதற்கு மேலதிக தகவல்களை இப்போது பகிர முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘வடசென்னை’ படத்தில் நடித்த அமீர், கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் ‘அரசன்’ படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.