ராஜா சாப்’ படத்தின் தோல்வியால் தயாரிப்பாளருக்கு புதிய படம் நடிக்க சம்மதித்த பிரபாஸ்.!
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்த ‘தி ராஜா சாப்’ திரைப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. எனினும், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பட வெளியீட்டுக்குப் பிறகு, கடந்த வாரம் பிரபாஸ் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அப்போது ‘ராஜா சாப்’ தோல்விக்குப் பொறுப்பேற்று, அவரது தயாரிப்பு நிறுவனத்துக்காக மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாம் நடித்து வரும் படங்களை முடித்த பின்னர், பிரபாஸ் புதிய படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் படத்தின் இயக்குநர் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.பிரபாஸின் இந்த முடிவை தெலுங்கு திரையுலகினர் பலரும் வரவேற்றுள்ளனர்.