களுத்துறை கொ*லைச் சந்தேகநபர்; மக்களின் உதவியை நாடும் பொலிஸார்.!
களுத்துறை வடக்கு, வாடியமங்கடை சந்திப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வரும் முக்கிய சந்தேகநபரைக் கைது செய்யப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த 2026 பெப்ரவரி 14 ஆம் திகதி, உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இந்த மரணம் நிகழ்ந்திருந்தது. இச்சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மற்றும் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
விசாரணைகளின் அடிப்படையில், இந்தக் கொலைச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் காணப்படும் நபர் குறித்த தகவல் ஏதேனும் தெரிந்தால், உடனடியாகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:
களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி: 071 – 8591692
களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம்: 071 – 8596395
தகவல் வழங்குவோரின் அடையாளம் மற்றும் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனப் பொலிஸார் மேலும் உறுதி அளித்துள்ளனர்.