உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

களுத்துறை கொ*லைச் சந்தேகநபர்; மக்களின் உதவியை நாடும் பொலிஸார்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

களுத்துறை வடக்கு, வாடியமங்கடை சந்திப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வரும் முக்கிய சந்தேகநபரைக் கைது செய்யப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

கடந்த 2026 பெப்ரவரி 14 ஆம் திகதி, உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இந்த மரணம் நிகழ்ந்திருந்தது. இச்சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மற்றும் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

விசாரணைகளின் அடிப்படையில், இந்தக் கொலைச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் காணப்படும் நபர் குறித்த தகவல் ஏதேனும் தெரிந்தால், உடனடியாகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:
களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி: 071 – 8591692
களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம்: 071 – 8596395

தகவல் வழங்குவோரின் அடையாளம் மற்றும் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனப் பொலிஸார் மேலும் உறுதி அளித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0