உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இளம் பெண்களின் அலைபேசிகளை ஊடுருவி நிர்வாண காணொளி கோரிய இளைஞன் சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இளம் பெண்களின் அலைபேசிகளைச் சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி நிர்வாண காணொளிகளைக் கோரி வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது பொலிஸ் உதவிப் பரிசோதகர் நீதிமன்றத்தில் முன்வைத்த தகவல்கள் வருமாறு,
சந்தேகநபர் கடந்த மூன்று வருடங்களாகப் போலி இணைய இணைப்புகளைப் பயன்படுத்தி இளம் பெண்களின் அலைபேசிகளுக்குள் ஊடுருவியுள்ளார். அங்கிருந்து பெண்களின் அந்தரங்கத் தரவுகளைத் தரவிறக்கம் செய்ததோடு, வட்ஸ்அப் ஊடாகத் தொடர்புகொண்டு மேலதிக நிர்வாண காணொளிகளைக் கோரி மிரட்டியுள்ளார். தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால், தன்னிடம் உள்ள காணொளிகளை இணையத்தில் கசியவிடுவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு களுத்துறை மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

சந்தேகநபர் தனது அடையாளத்தை மறைக்க ‘கண்டறிய முடியாத’ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய போதிலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் ‘பேஸ்புக்’ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரின் மனநிலை குறித்து முழுமையான மருத்துவ அறிக்கையைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் இளம் பெண்கள் மத்தியில் மிகுந்த எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0