உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டத்தரணி தம்பதி கொ*லை; கைதான முன்னாள் கடற்படை சிப்பாய் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

கொழும்பு, தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் அவருடன் இருந்த இருவர் மொனராகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி முன்னாள் கடற்படை சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் தென் மாகாணத்தில் மட்டும் பல துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை நடத்தி, இதுவரை 11 பேரைக் கொலை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இத்தனை கொலைகளைச் செய்த போதிலும், இதுவரை எந்தவொரு சம்பவத்திற்காகவும் இவர் பொலிஸாரினால் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் மூவருக்கு எதிராக 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே, தற்போது இரண்டாவது துப்பாக்கிதாரியும் சிக்கியுள்ளார்.

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொலைக்கான உண்மையான பின்னணி மற்றும் இந்தப் பாதாள உலகக் கும்பலின் ஏனைய தொடர்புகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0