நடிகை மீரா சோப்ராவின் புகார் – பயண அனுபவம் குறித்து கருத்து.!
நடிகை மீரா சோப்ரா தாம் முன்பதிவு செய்த தனியார் வாடகை வாகன சேவையில் ஏற்பட்ட அனுபவம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.வர் கூறியதாவது: காலை 6 மணிக்கு வாகனம் முன்பதிவு செய்தபோது, வந்த வாகனம் துர்நாற்றம் வீசும் நிலையில் மற்றும் தூசி நிறைந்திருந்தது.
ஓட்டுநரிடம் இது குறித்து கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என்றும், அவர் சோர்வாக இருந்ததாகவும் தெரிவித்தார். இதனால் 20 நிமிடங்களுக்குள் பயணத்தை நிறுத்தி வேறு வாகனத்தை முன்பதிவு செய்ததாகவும் கூறினார்.
ஆனால், உண்மையில் 20 நிமிடங்கள் மட்டுமே பயணம் செய்திருந்தாலும், 6 மணி நேரத்துக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், நாட்டின் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் வாடகை வாகன சேவைகளின் தரம் குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர், பயணிகளின்பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.