உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மேலதிக வகுப்புக்குச் சென்ற சிறுமி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

அனுராபுரம், கெபித்திகொல்லேவ – பதவிய பிரதான வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் வான் மோதி விபத்துக்குள்ளான 9 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து நிகழ்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அவர் உயிரிழந்தார் என்று பதவிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி குறித்த சிறுமி மேலதிக வகுப்பொன்றுக்குச் செல்வதற்காக வீதியை கடக்க முற்பட்ட போது, வேகமாக வந்த வான் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் கந்தூருவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த சனுல்லியா என்ற 9 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

விபத்து நிகழ்ந்த வேளையில், சிறுமியை மோதிய வான் அவ்விடத்தில் நிறுத்தப்படாமல் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தது. இருப்பினும், பின்னர் அந்த வான் சாரதி தானாகவே முன்வந்து பதவிய பொலிஸ் நிலையத்தில் வானுடன் சரணடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற இந்த அநியாய மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0