ஆயுதங்களை தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணி கைவிடப்பட்டது.!
கிளிநொச்சி மாவட்டம், பரந்தன் தொடருந்து நிலையம் அருகாமையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணி இடைநடுவே நிறுத்தப்பட்டது.கிளிநொச்சி பொலிஸ் நிலையம் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கிடைத்த தகவலின்படி இன்றைய தினம் மாவட்ட நீதிவான் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் எந்தவித தடையப் பொருட்களும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டது.இந்த நடவடிக்கையில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர், மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.