சுன்னாகத்தில் தங்கச் சங்கிலி திருட்டு – இராணுவ முகாமில் கடமையாற்றியவர் கைது.!
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சுன்னாகம் நகரப் பகுதியில் இடம்பெற்ற சங்கிலி திருட்டுச் சம்பவம் தொடர்பில், இராணுவ முகாமில் கடமையாற்றும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை சுன்னாகம் நகர வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக குறித்த பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையம் இல் முறைப்பாடு செய்துள்ளார்.அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மைலிட்டி இராணுவ முகாம் இல் கடமையாற்றும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சி. நிதர்சன் பதவியேற்றதையடுத்து, பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.