உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொ*லை; இரண்டாவது துப்பாக்கிதாரி கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இரண்டாவது துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த சந்தேகநபர் மொனராகலை, ஹுலந்தாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் உண்மையாகவே இரண்டாவது துப்பாக்கிதாரி தானா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, நவீன முக அடையாளத் தொழில்நுட்பம் மூலம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொலைச் சம்பவத்தில் டி-56 ரக துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய பிரதான துப்பாக்கிதாரி ஏற்கனவே அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

துப்பாக்கிதாரியை பன்னிபிட்டியவிலுள்ள தங்குமிடத்திற்கு அழைத்து வந்த நபர், ஏற்கனவே தாய்லாந்துக்கு தப்பியோடியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த மூவர் முன்னதாக கஹதுடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர், பெப்ரவரி 13 ஆம் திகதி இடம்பெற்ற இந்த இரட்டைக் கொலை தொடர்பான விசாரணைகள் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகக் கூறியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0