தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு நியமனம்.!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடுவை நியமித்துள்ளார்.
அரசியலமைப்பின் 154ஆ பிரிவின்படி, 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான உபகுழுவின் துணைத்தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகம் சிங்களக் கல்விப் பிரிவின் தலைவராகவும், அதே பல்கலைக்கழகத்தின் மூத்த உதவி நூலகராகவும் பணியாற்றியுள்ளார்.இந்த நியமன நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.