உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கையில் அதிகரித்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.ஜனவரி 1ஆம் திகதி முதல் பெப்ரவரி 22ஆம் திகதி வரை மொத்தம் 5,05,751 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


இதில், பெப்ரவரி 1ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 2,28,424 பேர் வருகை தந்துள்ளனர். பெப்ரவரி மாதத்தின் முதல் மூன்று வாரங்களிலும் ஒவ்வொரு வாரமும் 70,000ஐத் தாண்டி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை விசேட அம்சமாகும்.

முதல் வாரத்தில் 70,355 பேரும், இரண்டாவது வாரத்தில் 77,870 பேரும், மூன்றாவது வாரத்தில் 71,101 பேரும் பதிவாகியுள்ளனர்.நாட்டிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ள நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இலிருந்து 89,277 பேர் வருகை தந்துள்ளனர்.


அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் இலிருந்து 55,407 பேரும், ரஷ்யா இலிருந்து 45,351 பேரும், ஜேர்மனி இலிருந்து 35,413 பேரும், சீனா இலிருந்து 31,621 பேரும் வருகை தந்துள்ளனர்.மேலும் பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கணிசமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

44 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0