பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்.!
அளுத்கம பகுதியில் இருந்து சிவனடிபாத மலைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பிய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று மதியம் 1.30 க்கு நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அளுத்கம பகுதியில் இருந்து சிவனடிபாத மலைக்கு சென்று தரிசனம் முடித்து விட்டு மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பிய வேலையில் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் ரக்காடு கிராம பகுதியில் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் காரின் சாரதிக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் காரில் பயணம் செய்த மூவருக்கும் தெய்வாதீனமாக எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என நல்லதண்ணி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.


